News January 9, 2025
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

நெல்லை ஆட்சியர் அலுவகத்திற்கு இன்று காலை மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்ட நிலையில் அது புரளி என தெரியவந்தது. இந்நிலையில் மிரட்டல் விடுத்த பேட்டையை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவரை போலீசார் கைது செய்தனர். பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 வழங்காததால் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரனையில் தெரியவந்துள்ளது.
Similar News
News January 25, 2026
நெல்லை: விபத்தில் இளைஞர் தலை நசுங்கி பலி

நெல்லை மாவட்டம் பத்தமடை கோபாலன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மகாராஜன் (25). தனியார் நிறுவன ஊழியர். இவர் தன் நண்பர் மாரியுடன் நேற்று இரு சக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை சென்ற போது பத்தமடை அருகே பிரான்சேரி பகுதியில் லாரியை முந்தி சென்ற போது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த மகாராஜன் தலை நசுங்கி பலியானார். இதுகுறித்து மேல செவல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News January 25, 2026
நெல்லை: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News January 25, 2026
நெல்லை: நாய்கள் கடித்துக் குத்தறியதில் 11 உயிர்கள் பலி.!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள, ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாண்டி (வயது.65) என்பவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் விற்பனைக்காக மொத்தம் 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், 50 ஆடுகளில், 11 ஆடுகளை, இன்று (ஜன.24) அதிகாலை 1 மணியளவில், அடையாளம் காணப்படாத நாய் ஒன்று கடித்து குதறியதில், 11 ஆடுகளும் உயிரிழந்ததாக, அந்த விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.


