News January 9, 2025

ரயில்வேயில் 32,438 காலியிடம்.. 10ம் வகுப்பு படித்தால் போதும்

image

ரயில்வேயில் 32,438 காலியிடங்களுக்கு விரைவில் ஆட்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு வருகிற 23ஆம் தேதி முதல் ரயில்வே ஆட்தேர்வு இணையதளத்தில் தொடங்கவுள்ளது. குரூப்-D நிலையிலான பதவிகளுக்கு கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேசிய அப்ரென்டிஸ் சான்றிதழ் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் வயது வரம்பாக ஜூலை 1ஆம் தேதிப்படி 18 முதல் 26 வயது வரை இருத்தல் அவசியம்.

Similar News

News December 9, 2025

தமிழகத்தில் தவெகவுக்கு சிக்கல்: புஸ்ஸி ஆனந்த்

image

தமிழகத்தில் எல்லா வகையிலும் தவெக பரப்புரைக்கு சிக்கல் ஏற்படுத்துகின்றனர் என புஸ்ஸி ஆனந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய அவர், மற்ற கட்சிகள் புதுச்சேரியில் இவ்வளவு கூட்டத்தை கூட்டுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சிலவற்றை கொடுத்து உழைக்க வேண்டும் என கூறினார். தற்போது தளபதியின் (விஜய்) குடும்பமாகவே தொண்டர்கள் திரளாக வந்துள்ளதாகவும் கூறி நெகிழ்ந்தார்.

News December 9, 2025

யாரிடம் பிரிவினை உள்ளது? MP ஆ.ராசா

image

லோக்சபாவில் ‘வந்தே மாதரம்’ விவாதத்தின் போது, பிரிவினை குறித்து கூறும் PM, அது எங்கே உள்ளது, யாரிடம் உள்ளது? என்பதை விளக்க வேண்டும் என ஆ.ராசா தெரிவித்தார். வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு, இப்பாடல் அரசியல் ஆக்கப்படும் என தெரிந்திருக்காது என்றும் அவர் கூறினார்.

News December 9, 2025

‘ஏலியன் எலும்புக்கூடு’ பற்றி தெரியுமா?

image

சிலி நாட்டின் அட்டகாமா பாலைவனத்தில் 2003-ல், வெறும் அரை அடி கொண்ட எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அதன் தலை மட்டும் பெரிதாக வித்தியாசமாக இருந்ததால், அது ஏலியனின் எலும்புக்கூடு என வதந்தி பரவியது. ஆனால் சுமார் 15 வருட ஆய்வுக்கு பின் தான் தெரிந்தது, அது ஏலியன் அல்ல, ஒரு பெண் குழந்தையின் எலும்புக்கூடு என்று. 7 மரபணு குறைபாடுகளுடன் பிறந்து, குழந்தை இறந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!