News January 9, 2025
காரைக்கால் மீனவர்கள் 10 பேர் கைது

காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமாக விசைப்படையில் பல்வேறு பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் இன்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News January 15, 2026
புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

புதுச்சேரியில், மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணிஉயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவையாகும். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!
News January 15, 2026
புதுவை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

புதுவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <
News January 15, 2026
புதுச்சேரி: போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

புதுவையில் சார்லஸ் மார்ட்டின் எல்ஜேகே என்ற புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து, தேர்தல் அரசியல் பணிகளை செய்து வருகிறார். அவரது கட்சியில் பலரும் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அவரை சீண்டுவது போல முதல்வர் ரங்கசாமி ஆதரவாளர்களின் சார்பில் “லாட்டரி விற்பனைக்கு அரசு அனுமதி வேண்டுவோர், ஆட்சிக்கு வர நினைப்போர் உள்ளே அனுமதி இல்லை” என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


