News January 9, 2025
கரூரில் மகள் கல்யாணம்: கொண்டு வந்த பணம் போச்சே!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பன் (65). இவர் தனது மகளின் திருமணத்திற்காக கூட்டுறவு சேமிப்பு கணக்கில் இருந்த பணத்தையும், தோகைமலையில் ஐஓபி வங்கியில் நகைகளின் அடகு வைத்த பணம் என மொத்தம் ரூ.1,95,000 பணத்தை மஞ்சள் பையில் தோகைமலை பஸ் ஸ்டாண்டில் வைத்திருந்த போது யாரோ திருடிச் சென்றுவிட்டனர். புகாரின்பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News January 23, 2026
கரூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

கரூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார்,வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும். SHARE பண்ணுங்க.
News January 23, 2026
கரூரில் இலவச வக்கீல் சேவை வேண்டுமா..?

கரூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570 ,தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 , Toll Free 1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 23, 2026
அரவக்குறிச்சி அருகே ஓட்டுனர் மர்ம உயிரிழப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, எல்லமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன் 30. திருமணமாகாத இவர் கேட்டரிங் சர்வீஸில் ஓட்டுனராக வேலை பார்த்துள்ளார். நேற்று தும்பிவாடி கேட்டரிங் சர்வீஸ் குடோன் அருகே சுயநினைவின்றி கிடந்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரின் அத்தை ராஜ சுலக்சனா புகாரில் சின்னதாராபுரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு


