News January 9, 2025

 22,466 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 22,466 மாணவ மாணவியர் பயன் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

புதுச்சேரி: திருப்பணி ஆணை வழங்கிய சபாநாயகர்

image

அபிஷேகப்பாக்கம் விநாயகர், முத்தாலம்மன், நல்லதம்பி அய்யனார் ஆலய திருப்பணிகள் நடைபெறுவதற்கு குழு அமைக்கப்பட்டது. அதற்கான ஆணையை சபாநாயகர் செல்வம் இன்று வழங்கினார். தலைவராக முருகப்பன், பொருளாளராக சிங்கிரிக்குடி பெருமாள் கோயில் நிர்வாக அதிகாரி, தாசில்தார் பிரித்திவி மற்றும் 21 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை திருப்பணி குழு தலைவர் முருகப்பன் மற்றும் உறுப்பினர் பெற்றுக் கொண்டனர்.

News December 7, 2025

புதுச்சேரி: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

புதுச்சேரி மக்களே நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <>இங்கே <<>>க்ளிக் செய்து, RBI-இல் புகார் அளித்தால் போதும் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் ரூ.100 இழப்பீடாக வழங்கப்படும்.

News December 7, 2025

புதுவை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!