News January 9, 2025
பஸ்சில் போதை பொருள் கடத்திய நபர் கைது..!

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளாஸ்திரியிலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பஸ் ஒன்றில் சோதனை செய்த 10 கிலோ குட்கா பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 18, 2026
திருவள்ளூரில் EB பில் எகிறுதா..?

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 18, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது!

ஆந்திராவில் இருந்து சிலர் பைக்கில் உத்துக்கோட்டை வழியாக சென்னைக்கு கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு விவேகானந்தா சுக்லாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஒரு பைக்கை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த சையத் முஷரப்(26), சுகுமார்(35) என்பதும், 4 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.அவர்களை போலீசார் கைது செய்தனர்.
News February 18, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கம்மவார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(35). இவருக்கு கீர்த்தனா(28) என்ற மனைவியும் 4 வயதில் ஓர் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் குளிக்கச் சென்ற போது, தவறி விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


