News January 9, 2025
சபரிமலையில் அலைமோதும் கூட்டம்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் தேவசம்போர்டு திணறி வருகிறது. ஸ்பாட் புக்கிங் கவுன்டர்களில் 10,000 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், தினமும் 25,000 பேர் வரை பாஸ் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 90,000 பக்தர்கள் வந்தால் பிரச்னை இல்லையென கூறும் போலீசார், ஒரு லட்சம் பேர் வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
Similar News
News January 28, 2026
இனி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி எளிது: நயினார்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முக்கிய மைல்கல் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் 99% இந்தியப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரி நீக்கப்படும். TN இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், ஜவுளி, தோல், மின்னணு பொருட்கள் ஆகியவை TN-லிருந்து ஏற்றுமதி செய்வது எளிதாகும் எனவும் கூறியுள்ளார்.
News January 28, 2026
ஜனவரி 28: வரலாற்றில் இன்று

1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. 1933 – பாகிஸ்தான் என்ற பெயர் சௌத்ரி ரஹ்மத் அலியால் உருவாக்கப்பட்டது. 1865 – இந்திய சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பிறந்த தினம். 1986 – நடிகை ஸ்ருதி ஹாசன் பிறந்த தினம். 1997- சிறுபான்மையின சமூக ஆர்வலர் பழனி பாபா நினைவு தினம்.
News January 28, 2026
காசாவில் மீட்கப்பட்ட கடைசி பணயக் கைதியின் உடல்!

காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி பணயக்கைதியின் உடலை இஸ்ரேல் பாதுகாப்பு படை மீட்டது. காசாவில் போர் நிறுத்த அறிவிப்புக்கு பின், பணய கைதிகளை மீட்கும் பணி இஸ்ரேல் தீவிரம் காட்டி வந்தது. அதன்படி ஹமாஸால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 வயது இஸ்ரேலிய போலீஸ் சார்ஜென்ட் ரான் கவிலியின் உடல் 843 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. இவர் 2023 அக்.7-ம் தேதி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


