News January 9, 2025
நாளை தாமதமாக புறப்படும் ரயில்கள்

மதுரை திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஜனவரி 9 அன்று மதுரையிலிருந்து மாலை 05.50 மணிக்கு தாமதமாக புறப்படும். நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் ரயில் ஜனவரி 9 அன்று நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு காலதாமதமாக புறப்படும். திருச்செந்தூர் வாஞ்சி மணியாச்சி ரயில் ஜனவரி 10 அன்று திருச்செந்தூரில் இருந்து மாலை 03.40 மணிக்கு தாமதமாக புறப்படும்.
Similar News
News February 4, 2026
மதுரை இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் எண்கள்

மதுரை மாவட்டத்தில் இன்று (4.02.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகள் பட்டியல் மற்றும் அவசர தொடர்பு எண்கள் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டன. பொதுமக்கள் போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிகளுக்காக இந்த எண்கள் மூலம் நேரடியாக போலீசுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவியைப் பெறலாம்.
News February 4, 2026
மதுரை; மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அறிவு 47 கூலித் தொழிலாளி இவரது மனைவி பிரியா 40 இந்நிலையில் அறிவு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை மனைவி கண்டித்துள்ளார். மது பழக்கத்தை கணவர் நிறுத்தாததால் மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார், இதனால் மனமுடைந்த அறிவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 4, 2026
மனைவி கண் முன்னே வேன் மோதி கணவன் பலி

மதுரை கல்லணையை சேர்ந்தவர் பூமிநாதன்(67) மனைவி சங்கீதாவுடன் பைக்கில் நேற்று சென்று கொண்டிருந்தார். கோட்டைமேடு ராமசாமி பாலம்
அருகே சென்ற போது
வாடிப்பட்டி தனிச்சியத்தை சேர்ந்த மாரிமுத்து(43)
ஓட்டிச் சென்ற வேன் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தவறி கீழே விழுந்ததில் கணவர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .
அலங்காநல்லூர்
போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.


