News January 8, 2025

ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டாட்சியர் உத்தரவு

image

அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. அருப்புக்கோட்டை நகராட்சிக்குள் சாலைகள் மற்றும் முக்கிய தெருக்களில் இருபுறமும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.‌ இந்த ஆக்கிரமிப்புகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என அருப்புக்கோட்டை வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.‌ ஆக்கிரமிப்புகளை அகற்றாதவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வட்டாட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News September 4, 2025

BREAKING சிவகாசி: பட்டாசு விற்பனை அதிரடி உத்தரவு

image

ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கு தொடர்ந்தார். அதில் அன்லைன் பட்டாசு விற்பனை குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. ஆன்லைன் பட்டாசு விற்பனை செய்வது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

சிவகாசியில் தர்பூசணி பட்டாசு அறிமுகம்

image

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் சூடுபிடித்துள்ளது. இதனிடையே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வடிவிலான பட்டாசுகள் அறிமுகப்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தர்பூசணி வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தத்துருவமாக தர்பூசணி போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்டாசுகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

News September 4, 2025

சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து

image

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் பிரதாப் மான்சிங் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நாரணாபுரம் புதூரை சேர்ந்த முருகன் மனைவி காயத்ரி என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் அவர் பேப்பர் கேப்ஸ் என்ற பட்டாசை பாக்கெட் செய்த போது திடீரென உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயத்ரிக்கு தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!