News January 8, 2025

நேர விரயம்: அரசு பஸ் டிரைவர்கள் மீது நடவடிக்கை

image

உரிய நேரத்தில் பஸ்சை இயக்காத டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று TN அரசு எச்சரித்துள்ளது. மாநிலத்தில் 1,200 அரசு விரைவு பேருந்துகள் இயங்கும் போதும், மக்கள் நேர விரயம் காரணமாக ஆம்னி பேருந்துகளில் பயணிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு அரசு பஸ்களை இயக்கும் டிரைவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பயணிகளிடம் பயண அனுபவம் குறித்து SMS மூலம் கருத்து கேட்கப்பட உள்ளது.

Similar News

News January 19, 2026

அதிமுகவில் மீண்டும் OPS? செல்லூர் ராஜு கொடுத்த அப்டேட்

image

தொகுதி மாறப்போவதாக வரும் தகவல் வதந்தி எனக் கூறிய செல்லூர் ராஜு, மதுரை மேற்கு தொகுதியிலேயே போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி எடுப்பதாகவும், அதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், OPS, TTV இணைப்பை பற்றி EPS தான் முடிவெடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

News January 19, 2026

கழிவறையில் பெண் போலீஸை வீடியோ எடுத்த SI சிக்கினார்

image

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெண் காவலர்களின் கழிவறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த SI கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், நேற்று முன்தினம் CM ஸ்டாலினின் பாதுகாப்பிற்காக சென்ற பெண் காவலர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட பரமக்குடி SI முத்துப்பாண்டி, தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காக்க வேண்டிய போலீஸே இப்படியா?

News January 19, 2026

எதிர்ப்பையும் மீறி CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

image

திருப்போரூரில் ₹342.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மாமல்லன் நீர்தேக்கத்திற்கு CM அடிக்கல் நாட்டினார். சுமார் 4,376 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ளநீரை சேமிக்கும் வகையில் இது அமைய உள்ளது. இந்த நீர்தேக்கத்தால், தங்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்படும் என்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், CM இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

error: Content is protected !!