News January 8, 2025

ICUவில் பிரசாந்த் கிஷோர்

image

சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் ICUவில் சிகிச்சை பெற்று வருகிறார். பிஹாரில் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து ஹாஸ்பிட்டல் அழைத்துச்சென்றனர். அங்கும், அவர் உண்ணாவிரதம் இருந்த நிலையில், நேற்றிரவு ICUவில் அனுமதிக்கப்பட்டு நரம்பு வழியாக திரவம் செலுத்தப்பட்ட பின் உடல்நலம் தேறி வருகிறது.

Similar News

News January 14, 2026

நள்ளிரவில் பஸ்களை ஆய்வு செய்த அமைச்சர்!

image

பொங்கல் பண்டிகையை கொண்டாட நேற்று ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இந்நிலையில், நள்ளிரவில் கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் அமைச்சர் சிவசங்கர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் புறப்படுகின்றனவா, டிக்கெட் விலை சரியாக உள்ளதா என்பதை மக்களிடமும் கேட்டறிந்தார். மேலும், கூடுதல் கட்டணத்தை தடுக்க 36 குழுக்கள் தணிக்கை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

News January 14, 2026

சபரிமலை மகர ஜோதியின் பின்னணி என்ன?

image

<<18851968>>சபரிமலையில் <<>>ஆண்டுக்கு ஒருமுறை ‘கொச்சுபம்பா’ ஊரின் பொன்னம்பலமேட்டில் கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே மகர ஜோதி. ஐயப்பனே தீப வடிவமாக தோன்றுகிறார் என்பது ஐதீகம். சங்கராந்திக்கு 2 நாட்களுக்கு முன் பந்தளத்தில் இருந்து 3 பெட்டியில் திருவாபரணங்கள் சபரிமலை வரும். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வைர கிரீடம், தங்க ஆரம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்ட ‘சரணம்ஐயப்பா’ என்னும் கோஷம் நிறையும்.

News January 14, 2026

அதிமுக கூட்டணியில் இணைந்தார்

image

ஊராளிக் கவுண்டர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் NV நாகராஜ், EPS-யை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். நேற்று தமமுகவின் நிறுவனர் <<18845319>>ஜான் பாண்டியன்<<>>, தாங்கள் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்திருந்த நிலையில், அடுத்தடுத்து கூட்டணியை இறுதி செய்யும் பணியில் EPS இறங்கியுள்ளார். வரும் 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்ய அதிமுக மும்முரம் காட்டி வருகிறது.

error: Content is protected !!