News January 8, 2025
டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி… 5,000 பேர் மீது வழக்கு!

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து நடந்த பேரணியில் பங்கேற்ற 5,000 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய நடை பயண பேரணி தமுக்கம் மைதானத்தில் பெருங்கூட்டமாக நிறைவுபெற்றது. சுமார் 18 km தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்த இப்பேரணியில் மேலூர் & அதனை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 21, 2026
ஜன நாயகன் ரிலீஸ்.. காலையிலேயே ஹேப்பி நியூஸ்

‘ஜன நாயகன்’ பட சென்சார் சான்று தொடர்பான வழக்கை சென்னை HC தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. அதேநேரம், இன்று (அ) நாளை இதுதொடர்பாக தீர்ப்பு வெளியாகும் என விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த 2 நாள்களுக்குள் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்த வாரம் (அ) பிப்ரவரி 2-வது வாரத்தில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
News January 21, 2026
சர்க்கரையை விரும்பி சாப்பிடுவீங்களா?

டீ, காபி சொல்லும்போது, கொஞ்சம் Sugar Extra என சொல்பவரா நீங்க? இதை கொஞ்சம் படிங்க. அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக எடை அதிகரிப்பதில் சர்க்கரைதான் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், சர்க்கரை இதயத்தை கடுமையாக பாதிக்கும் என்றும் புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்ற பிரச்னைகளும் வரலாம் என டாக்டர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
News January 21, 2026
கூட்டணி இருக்கா? காங்கிரஸ் பதிலால் திமுக அதிர்ச்சி

திமுக கூட்டணியில் காங்., நீடிக்கிறதா என்ற கேள்விக்கு காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என்று பதிலளித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து காங்., தலைவர்களிடம் தலைமை கருத்து கேட்டுள்ளதாக கூறிய அவர், அனைவரும் அவரவர் விருப்பங்களை கூறி உள்ளதால் அதனடிப்படையில் தலைமை முடிவெடுக்கும் என்றார். இவருடைய இந்த பதில் திமுகவிற்கு சற்று அதிர்ச்சியளித்திருப்பதாக பேசப்படுகிறது.


