News January 8, 2025
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் போட்டிகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு பத்தாயிரம் விதம் வழங்கப்பட உள்ளது. பள்ளி கல்லூரிகளின் சார்பில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் கலந்து கொள்ளலாம்.
Similar News
News September 23, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள (bc/mbc/dnc) ஆகிய பிரிவு மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 30-09-2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
பெரம்பலூர் விளையாட்டு வீரர்களுக்கு Good News

பெரம்பலூர் மக்களே தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் (08/09/2026) அன்று பெரம்பலூர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மைதானத்தில் நடைபெறுகின்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டிகள் இடம்பெறுகின்றன. உங்கள் பகுதியினருக்கும் SHARE பண்ணுங்க!
News September 23, 2025
பெரம்பலூர் விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து, மழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடுகளை விவசாயிகள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், ஆலத்தூர்- 9597045973, பெரம்பலூர் – 9944645189, வேப்பந்தட்டை- 7502702758 வேப்பூர் – 9786377886 தொடர்பு கொண்டு பயன்படலாம் என கூறியுள்ளார்.