News January 8, 2025
₹1.15 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை!

தேசிய அலுமினியம் நிறுவனத்தில் காலியாக உள்ள 518 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபிட்டர், ஆபரேட்டர், டெக்னீஷியன், செவிலியர், மருந்தாளர் உள்ளிட்ட பணிகளில் சேர விருப்பமுள்ளோர் ஜன. 21-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-35. சம்பளம்: ₹29,500 – ₹1,15,000. கல்வித்தகுதி: B.Sc., ITI, Diploma. கூடுதல் தகவல்களுக்கு https://nalcoindia.com/ சென்று பார்க்கவும்.
Similar News
News September 14, 2025
நல்லகண்ணு விரைவில் டிஸ்சார்ஜ்: மருத்துவ குழு

CPI மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ராஜீவ் காந்தி ஹாஸ்பிடல் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 22-ம் தேதி வீட்டில் தடுமாறி விழுந்து தலையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அவரை 24 மணிநேரமும் டாக்டர்கள் குழு கண்காணித்து வருவதாகவும், தற்போது இயற்கையான முறையில் சுவாசித்து வரும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளனர்.
News September 14, 2025
காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்

காலையில் எழுந்ததும் நாம் என்ன செய்கிறோம் என்ற விஷயம் தான் நமது நாளே எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு, காலையில் எழும்போதே பரபரப்பாக எழுந்தால், அன்றைய நாளே நிதானமாக போகாது, செய்யும் விஷயங்களை எல்லாம் பதற்றத்தோடே செய்வீர்கள். இதுபோல, காலையில் எழுந்ததும் செய்யவே கூடாத பல விஷயங்கள் இருக்கிறது. அது என்ன என்பதை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News September 14, 2025
இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்: ப.சிதம்பரம்

இந்தியாவிலும் புரட்சி வெடிக்காமல் இருப்பதற்கு, நாம் இன்னும் ஜனநாயக நாடாக இருப்பதே காரணம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், பசி, வேலையின்மை, வறுமை அதிகரித்துவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், இது எப்போது வெடிக்கும், எங்கு வெடிக்கும், அப்போது யார் தலைமை தாங்குவார்கள் என்று தன்னால் கூற முடியாது என்றார்.