News January 8, 2025

மகளுக்கு பாலியல் தொந்தரவு தொல்லை தந்தைக்கு சிறை

image

உத்தமபாளைத்தை சேர்ந்த 50 வயது பெண் அவருக்கு 55 வயதில் கணவரும் 16 வயதில் மகளும் உள்ளனர். கடந்த 2021ம் ஏப்ரலில் மகள் இரவில் தூங்கும் போது தந்தை பாலியல் தொந்தரவு செய்தார். இதனை தாயிடம் சிறுமி தெரிவித்தார். இது பற்றி சைல்டுலைன் எண்ணில் தாய் புகாரளித்தார். வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சிறுமி தந்தைக்கு 5 ஆண்டு சிறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

Similar News

News November 12, 2025

போடி: வீடு புகுந்து நகைகளை திருடிய சிறுவர்கள்

image

போடி அருகேயுள்ள துரைராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (27) என்பவரது வீட்டுக்குள் புகுந்த பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த 15, 13 வயது உடைய 2 சிறுவர்கள் பீரோவை திறந்து ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர். இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 12, 2025

தேனி: அண்ணா பல்கலை.,யில் வேலை., உடனே APPLY

image

தேனி மக்களே, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Accounts Executive / Data Entry Operator பல்வேறு பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ. 14க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் எழுத்து தேர்வு கிடையாது. சம்பளம் ரூ.24,000 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை ஷேர் செய்யுங்க.

News November 12, 2025

தேனி: வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

image

பெரியகுளம், டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (60). இவா் தேனி அருகே மதுராபுரி பகுதியில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்றாா். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் காணப்படாத வாகனம் பாலமுருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. படுகாயமடைந்த பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (நவ.11) உயிரிழந்தாா். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு.

error: Content is protected !!