News March 25, 2024

விக்கிரவாண்டி பைக் விபத்தில் பெண் பலி

image

திண்டிவனம் தீர்த்தகுளத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் மனைவி கௌசல்யா, மாமியார் பாக்கியலட்சுமியுடன் நேற்று (மார்ச் 24) பைக்கில் விக்கிரவாண்டி அருகே சென்று கொண்டிருந்தார். வழியில் எதிர்பாராமல் வேன் மோதி 3 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பாக்கியலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

Similar News

News September 6, 2025

விழுப்புரம்: PHONE தொலைந்தால் என்ன செய்யலாம்?

image

விழுப்புரம் மக்களே, உங்கள் செல்போன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடுபோனாலோ இனி கவலை வேண்டாம். மத்திய அரசின் சஞ்சார் சாத்தி என்ற <>இணையதளம் <<>>மூலம், உங்கள் செல்போன் தொலைந்தது குறித்துப் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும்போது, செல்போன் எண், IMEI எண் உள்ளிட்ட தகவல்களைப் பதிவிட வேண்டும். உங்கள் போன் தானாகவே அணைக்கப்பட்டுவிடும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

News September 6, 2025

விழுப்புரம்: அரசு அதிகார மையத்தில் வேலை!

image

விழுப்புரம் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு துறையில் பட்டம், 3 ஆண்டு அனுபவம் அவசியம். மாத ஊதியம் ரூ.20,000. விண்ணப்பங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அல்லது இணையதளத்தில் கிடைக்கும். கடைசி தேதி 22.9.2025 மாலை 5.45 மணி. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News September 6, 2025

அம்பேத்கர் விருது: விழுப்புரம் ஆட்சியர் செய்தி

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!