News January 8, 2025

அரக்கோணம் அருகே ரயில்வே ஊழியர் தற்கொலை

image

அரக்கோணம் மங்கம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் தேவன் (வயது 35). ரெயில்வே ஊழியர். இவர் இதே மார்கத்தில் மேம்பாலம் அருகே நேற்று காலையில் அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 14, 2025

ராணிப்பேட்டையில் பிறந்து 8 நாளில் குழந்தை உயிரிழப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு காந்திநகரைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரின் 8 நாள் பெண் குழந்தை, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அஜித்குமார், மருத்துவமனை முன்பு பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 14, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு 9884098100 அழைக்கலாம்.

News August 13, 2025

ராணிப்பேட்டை: குற்றவாளிக்கு 20 வருடம் சிறை தண்டனை

image

ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பாலியல் குற்றம் புரிந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தணிகாசலம் (45) என்பவருக்கு 20 வருடங்கள் கடும் காவல் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தால் இன்று (ஆகஸ்ட் 13) தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை எஸ்.பி. பாராட்டினார்.

error: Content is protected !!