News January 8, 2025
இந்தியாவில் ₹25,500 கோடி முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்

இந்தியாவில் சுமார் ₹25,500 கோடி முதலீடு செய்ய உள்ளதாக மைக்ரோ சாப்ட் நிறுவன தலைவர் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐ., விரிவாக்க பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இந்தியர்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News January 20, 2026
புதுவையில் 3 மாத்திரைகளுக்கு தடை!

குடல் சிகிச்சைக்காக வழங்கப்படும் 3 மாத்திரைகள் தரமற்றவை என கருதி புதுச்சேரி அரசு தடை செய்துள்ளது. இமாச்சலில் தயாரிக்கப்பட்ட மாக்பான்சோ 40 மாத்திரை, கேரளாவின் பெபாவிட் பாராசிட்டமல் 650mg, ராஜஸ்தானின் சங்காவதி 5g ஆகிய மாத்திரைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை இனி விற்பனை செய்யக்கூடாது என்றும், இருப்பில் உள்ள மாத்திரைகளை அந்த நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
News January 20, 2026
கவர்னர் உரையே இனி இருக்காதா?

சட்டப்பேரவையில் இருந்து 4-வது ஆண்டாக கவர்னர் வெளியேறியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் கவர்னர் உரை வாசிப்பு என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இது அமலுக்கு வர வலியுறுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
News January 20, 2026
உள்கட்சி அதிருப்தி.. செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி

தவெகவில் புஸ்ஸி ஆனந்த் அளவிற்கு முக்கியத்துவம் வழங்காததால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தவெக பிரசார குழுவில் KAS-க்கு 3-ம் இடம் வழங்கப்பட்டிருப்பது, தனது தொகுதி மா.செ.விடம் பேச ஆனந்தின் அனுமதி பெறவேண்டிய நிலை, CBI விவகாரத்தில் கருத்தை கேட்காதது, தான் அழைத்து வந்தவர்களுக்கு பதவிகள் வழங்கவில்லை என பல விஷயங்களில் KAS அதிருப்தியில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


