News January 8, 2025
இஸ்ரோவின் புதிய தலைவர் வி.நாராயணன்

இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்தது மத்திய அரசு. வரும் 14ஆம் தேதி அவர் பொறுப்பேற்கவுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட அவர், திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள LPSCயின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
Similar News
News January 16, 2026
திருப்பத்தூரில் ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கமலா (85). இவர் நேற்று (ஜன.15) சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது பெங்களூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மூதாட்டி மீது மோதியதில் மூதாட்டி அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
News January 16, 2026
ELECTION: ராமதாஸ் முன் உள்ள 3 வாய்ப்புகள் இதுதான்!

NDA கூட்டணியில் அன்புமணி சேர்ந்துவிட்டதால், ராமதாஸுக்கு இன்னும் 3 வாய்ப்புகளே உள்ளன. 1.திமுக அல்லது தவெக கூட்டணியில் சேர்ந்து அன்புமணி தரப்புக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்குவது. 2. தனித்து களம் காண்பது. 3.அன்புமணியை சமாதானப்படுத்தி அதிமுக அணியில் ஒற்றை இலக்க தொகுதிகளை பெறுவது. வரும் தேர்தலில் எந்த அணி அதிக MLA-க்களை வெல்லுமோ, அந்த அணியே பாமகவை கைப்பற்றும் என கூறப்படுகிறது.
News January 16, 2026
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

உழவுத் தொழிலில் விவசாயிகளுக்கு துணைநிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணிக்குள்ளும் பொங்கல் வைக்கலாம். மேலும், அந்த பொங்கலை மாட்டிற்கு கொடுத்து வழிபாடு செய்வது சிறப்பு. வீட்டில் மாடுகள் இல்லாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை வழிபடலாம்.


