News January 8, 2025
தொப்பூர் சாலை விரிவாக்கம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம்

நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் காணிகாரஅள்ளி கிராமத்தில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தொப்பூர் சாலை விரிவாக்கத்திற்கான பூர்வாங்கப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி ஆகியோர் இருந்தனர்.
Similar News
News January 28, 2026
தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி வரும் ஜனவரி 31-ம் தேதி இரவு 10 மணி முதல் பிப்ரவரி 3-ம் தேதி காலை 12 மணி வரை மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்து செய்யப்படும் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படை வீரர் விற்பனை கூடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
News January 28, 2026
தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
News January 28, 2026
தருமபுரி விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர்!

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம் அருகில் வட்டாரப் போக்குவரத்து துறையின் சார்பில் இன்று (ஜன.28) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


