News January 7, 2025

ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசு விநியோகம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வரும் ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான புகார்களுக்கு 04562-252680, 04562-252016 என்ற எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 4, 2025

BREAKING சிவகாசி: பட்டாசு விற்பனை அதிரடி உத்தரவு

image

ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கு தொடர்ந்தார். அதில் அன்லைன் பட்டாசு விற்பனை குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தது. ஆன்லைன் பட்டாசு விற்பனை செய்வது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2025

சிவகாசியில் தர்பூசணி பட்டாசு அறிமுகம்

image

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் சூடுபிடித்துள்ளது. இதனிடையே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வடிவிலான பட்டாசுகள் அறிமுகப்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தர்பூசணி வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தத்துருவமாக தர்பூசணி போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்டாசுகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

News September 4, 2025

சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து

image

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதியில் பிரதாப் மான்சிங் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நாரணாபுரம் புதூரை சேர்ந்த முருகன் மனைவி காயத்ரி என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் அவர் பேப்பர் கேப்ஸ் என்ற பட்டாசை பாக்கெட் செய்த போது திடீரென உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயத்ரிக்கு தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!