News January 7, 2025
கிருஷ்ணகிரி மாணவி முதலிடம் பிடித்து சாதனை

பள்ளிக்கல்வித்துறை சார்பாக, அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், நாகரசம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி ரா.நேசிகா முதல் பரிசு பெற்றார். மாணவிக்கு முதலமைச்சர் பரிசு வழங்கியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Similar News
News February 3, 2026
ஓசூர் அருகே சோழர் கால கோயில் கண்டுபிடிப்பு

ஓசூர் அடுத்துள்ள பெகிலி என்ற ஊரில் மண்ணுக்குள் பாதி புதையுண்ட நிலையிலும், மரங்களால் சூழப்பட்ட நிலையிலும் சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிற்காலச் சோழர் கால கோயில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் இக்கோயிலை காமன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஜெயலட்சுமி கண்டுபிடித்துள்ளார்.
News February 3, 2026
ஓசூர் அருகே சோழர் கால கோயில் கண்டுபிடிப்பு

ஓசூர் அடுத்துள்ள பெகிலி என்ற ஊரில் மண்ணுக்குள் பாதி புதையுண்ட நிலையிலும், மரங்களால் சூழப்பட்ட நிலையிலும் சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பிற்காலச் சோழர் கால கோயில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் இக்கோயிலை காமன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ஜெயலட்சுமி கண்டுபிடித்துள்ளார்.
News February 2, 2026
கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (02.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.


