News January 7, 2025
கதிர் ஆனந்தின் கல்லூரியில் மீண்டும் ED சோதனை

வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்திற்கு சொந்தமான காட்பாடி கிங்ஸ்டன் கல்லூரில் மீண்டும் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையின்போது சில கணினிகள் வேலை செய்யாததால், இன்று மீண்டும் சோதனை நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையின் போது சுமார் 2 கோடி ரொக்கம் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 17, 2026
BREAKING: இந்தியா அபார வெற்றி

U19 WC-யில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் வைபவ் சூர்யவன்ஷி(72), அபிக்யான் குண்டு(80) அரைசதம் அடித்திருந்தனர். தொடர்ந்து வங்கதேசம் விளையாடிய போது 17.2 -வது ஓவரில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் 29 ஓவர்களில் 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை தழுவியது.
News January 17, 2026
இண்டிகோ நிறுவனத்திற்கு ₹22.20 கோடி அபராதம்!

கடந்த மாதம் சுமார் 2,500 விமானங்களை ரத்து செய்து ஏற்படுத்திய இடையூறுகளுக்காக இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு ₹22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்திய நிலையில், தற்போது அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட கால அமைப்பு ரீதியான திருத்தங்களை உறுதி செய்வதற்காக, இண்டிகோ நிறுவனம் ₹50 கோடிக்கு வங்கி உத்தரவாதத்தை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News January 17, 2026
IPL திருவிழாவுக்கு சின்னசாமி ஸ்டேடியம் ரெடி!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற IPL கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த பெருந்துயரத்தால் அங்கு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தாண்டு RCB-யின் IPL ஆட்டங்கள் புனேவில் நடத்தப்படும் என கூறப்பட்டது. இதனிடையே சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த KSCA வைத்த கோரிக்கையை ஏற்று, அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் சர்வதேச மற்றும் IPL போட்டிகள் அங்கு தொடர்ந்து நடைபெறும்.


