News January 7, 2025

தமிழக காவல்துறைக்கு நெல்லை முபாரக் கண்டனம்

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் எதிர்கட்சிகள் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு போக்குவரத்து நெரிசல், சட்ட ஒழுங்கு பிரச்சனை என காரணத்தை கூறி அனுமதி மறுக்கும் காவல்துறை மாநில முழுவதும் திமுகவின் போராட்டங்களுக்கு ஒரே இரவில் மேடை அமைத்து போராட்டம் நடத்த அனுமதி அளித்தது எப்படி? காவல்துறையின் இத்தகைய பாரபட்சம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

Similar News

News August 22, 2025

நெல்லை: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி பணி

image

நெல்லை இளைஞர்களே; பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>செய்யவும். *ஷேர் பண்ணுங்க

News August 22, 2025

நெல்லை: காவல்துறை சிசிடிவி கேமராவை திருடி விற்ற சம்பவம்

image

பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி இரவு போலீசார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காசி தர்மம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் சேதமடைந்தும், ஒரு கேமிரா காணாமல் போயிருந்தது, விசாரணை நடத்தி அதே பகுதியில் உள்ள 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

News August 22, 2025

நெல்லையில் முக்கிய ரயில்கள் சேவை மூன்று மாதம் நீடிப்பு

image

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் மற்றும் திருச்சிராப்பள்ளி – தாம்பரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது நவம்பர் 2025 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!