News January 7, 2025
சத்துணவு பணியாளர்களின் பொறுப்பு படி ₹1000ஆக உயர்வு

சத்துணவு பணியாளர்களின் கூடுதல் பொறுப்பு படியை ₹600ல் இருந்து ₹1000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு சத்துணவு பணியாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை கூடுதலாக கவனித்து வருவதாலும், உயர்ந்து வரும் விலைவாசி காரணமாகவும், அவர்களுக்கு நாளென்று ₹20 வீதம் மாதத்திற்கு ₹600 ஆக வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப் படி, ஒரு நாளுக்கு ₹33 வீதம், மாதத்திற்கு ₹1000ஆக உயர்த்துவதாக கூறியுள்ளது.
Similar News
News January 23, 2026
வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால், இன்று மாலை ரூபாய் மதிப்பு 54 பைசா சரிந்து ₹91.95-ஆக உள்ளது. இது, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News January 23, 2026
ஜெயலலிதா குறித்து PM மோடி சொன்ன வார்த்தை!

TN-ல் தற்போது பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை அரசு தடுக்க தவறிவிட்டதாகவும் PM மோடி சாடியுள்ளார். மதுராந்தகத்தில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதாவின் ஆட்சியில் குற்றங்கள் கட்டுக்குள் இருந்ததாகவும், அவர் தைரியமாக நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார். மேலும், போதைப்பொருள் மாஃபியா கும்பலிடம் மாணவர்களை திமுக ஒப்படைத்துவிட்டதாகவும் விமர்சித்தார்.
News January 23, 2026
மாம்பழம் சின்னம் யாருக்கு? அன்புமணி VS ராமதாஸ் மோதல்

NDA கூட்டத்தில் ‘மாம்பழம்’ சின்னம் இடம்பெற்றதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்த நிலையில், இதற்கு அன்புமணி பதிலளித்துள்ளார். அதில் ECI தங்களுக்குதான் சின்னத்தை பயன்படுத்த அங்கீகாரம் கொடுத்துள்ளதாகவும், இதுகுறித்து ECI-யிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். சின்னம் தொடர்பான இந்த மோதல், வரும் நாள்களில் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


