News January 7, 2025
திருவாரூர்: 15 வயது சிறுமிக்கு திருமணம்; 4 பேர் மீது வழக்கு

சிதம்பரம் அருகே சக்தி நகரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு படித்து வந்த இவருக்கு திருவாரூர் நெய்விளக்கு தோப்பு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞருடன் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் குழந்தை திருமண செய்த சந்தோஷ், சிறுமியின் தந்தை முருகன் மற்றும் உறவினர்களான அமுதா, வளர்மதி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News July 11, 2025
திருவாரூர்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ தமிழகத்தில் நாளை 13.8 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
News July 11, 2025
நெல் ஜெயராமனுக்கு சிலை; முதல்வர் அறிவிப்பு!

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் எஸ் எஸ் நகரில் இன்று (ஜூலை 10) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக முதலவர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் அவர்களுக்கு, திருத்துறைப்பூண்டியில் ஆள் உயர சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
News July 11, 2025
திருவாரூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு 10 மணி முதல் நாளை(ஜூலை 11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.