News January 7, 2025
ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாணவிகள்

‘சி கேப்’ அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கங்கள் இணைந்து நடத்திய கைப்பந்து போட்டியில், முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் சிறப்பு நிலை மாணவிகள் முதல் பரிசு வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இன்று நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ.சாந்தி பங்கேற்றார்.
Similar News
News February 17, 2026
ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சி, உத்திரமேரூர், ஆலந்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் உள்ள பதற்றமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகள் குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, தேர்தலை அமைதியாக நடத்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
News February 17, 2026
காஞ்சி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

காஞ்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 17, 2026
காஞ்சிபுரம்: பம்புசெட்டு அமைத்தால், இது இலவசம்!

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு க்ளிக் செய்து<


