News March 25, 2024
தூத்துக்குடியில் வெளியான பட்டியல்

தமிழகம் முழுவதும் நாளை பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது, தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 106 மையங்களில்10 ஆயிரத்து 854 மாணவர்கள் 11, 453 மாணவிகள் என மொத்தம் 23,237 மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
BREAKING தூத்துக்குடிக்கு வரும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்.13 முதல் டிச.20 வரை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். அதன்படி செப்.13 அன்று திருச்சியில் தொடங்கி அக்.11ம் தேதி அன்று நெல்லை, குமரி, தூத்துக்குடி மக்களை சந்திக்க உள்ளார். இதற்காக பாதுகாப்பு கோரி காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
News September 9, 2025
தூத்துக்குடியில் வேலை வாய்ப்பு – ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படியில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளது. இதில் ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க, கூடுதல் விவரங்களை <
News September 9, 2025
BREAKING ஏரலில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் தனியார் செங்கல் சூலை செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமண பெருமாள்(38) என்பவர் செங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த பணியில் ஈடுபட்ட போது அவர் சிறிது நேரத்திற்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.