News January 7, 2025
டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி 11ஆம் தேதி தொடங்குகிறது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் வரும் ஜன.11ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை என வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் ஆதார் எண் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகவும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News February 9, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் தனது பைக்கில் வி.கூட்டுரோட்டில் இருந்து வீட்டிற்கு செல்ல ராயப்பனூர் பிரிவு சாலையை கடந்தார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த BMW கார் மோதிய விபத்தில் அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வந்த இரண்டு கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானன. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 9, 2026
கள்ளக்குறிச்சியில் இன்று டாஸ்மாக் இயங்காது!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இன்று(பிப்.9) மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் அடையாள போராட்டம் நடத்துகின்றனர். ஆகையால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் 3 மணி நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 9, 2026
கள்ளக்குறிச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை!

ஏ.குமாரமங்கலத்தை சேர்ந்த அருணாவிற்கும் சந்தோஷ் குமார் என்பவருக்கும் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், அருணாவிற்கு தீராத வயிறு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் ஜன்னல் கம்பியில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


