News January 7, 2025
அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை?

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம் ₹1,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தில் 1.66 கோடி மகளிர் விண்ணப்பித்திருந்த நிலையில், நிபந்தனைகள் அடிப்படையில் 1.15 கோடி பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், முதல்வர் பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதி முதல் அனைவருக்கும் மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News September 14, 2025
பாஜக அதிகாரத்தை பறிக்கிறது: விஜய்

தென் இந்தியாவின் அதிகாரத்தை பாஜக பறிக்கிறது என தேர்தல் பரப்புரையில் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். அரியலூர் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்கு திருட்டு, தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்தார். பாஜக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதாகவும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் இந்தியாவிற்கு துரோகம் செய்கிறது எனவும் அவர் சாடினார்.
News September 14, 2025
ராசி பலன்கள் (14.09.2025)

➤மேஷம் – புகழ் ➤ரிஷபம் – கீர்த்தி ➤மிதுனம் – சுபம் ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – அன்பு ➤கன்னி – சாந்தம் ➤துலாம் – வெற்றி ➤விருச்சிகம் – வரவு ➤தனுசு – சுகம் ➤மகரம் – கோபம் ➤கும்பம் – பாராட்டு ➤மீனம் – திறமை.
News September 14, 2025
இளையராஜாவின் ரத்தத்தில் இசை ஊறியுள்ளது: ரஜினி

இளையராஜா என்ற எளிய மனிதனுக்கு பிரமாண்ட விழாவை தமிழக அரசு நடத்தியுள்ளதாக ரஜினி தெரிவித்தார். தன் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா என தெரிவித்த அவர், இளையராஜாவின் நாடி, நரம்பு, ரத்தத்தில் இசை ஊறியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார். பல சோகங்களை வாழ்வில் கண்ட இளையராஜா, SPB மறைவுக்கு சிந்திய கண்ணீரை யாருக்கும் சிந்தவில்லை என ரஜினி தெரிவித்தார்.