News January 7, 2025
புதுவையில் ஜன.20 இல் புத்தக கண்காட்சி தொடக்கம்

புதுவை அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி & விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி- 2025, ஜன.20 முதல் 26-ஆம் தேதி வரை, கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டப வளாகத்தில் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளூா் & வெளியூா் பதிப்பாளா்கள், விற்பனையாளர்கள் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளுடன் ஜன.13- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
Similar News
News September 11, 2025
புதுவை: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !
News September 11, 2025
புதுச்சேரியில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு

பாரதியார் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில், இன்று (11.09.2025) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன் திருமுருகன் சட்டமன்ற உறுப்பினர்கள் AK சாய், J. சரவணன்குமார், S. ரமேஷ் R.பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
News September 11, 2025
வி.ஏ.ஓ போட்டி தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்!

புதுச்சேரி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 41 கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான போட்டி தேர்வு, வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகே, மற்றும் ஏனாம் பகுதிகளில் மொத்தம் 86 தேர்வு மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டினை, தேர்வர்கள் htttp://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் இன்று 11ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.