News March 25, 2024
திருப்பத்தூர்: பதட்டமான வாக்குச்சாவடிகளில் எஸ்பி ஆய்வு

ஆம்பூர் உட்கோட்டத்திற்குட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் பி கஸ்பா ரெட்டி தோப்பு, சான்றோர் குப்பம், மற்றும் மேல்மிட்டாலம் வெங்கட சமுத்திரம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாச்சம்பட்டு மற்றும் பேராம்பட்டு சோதனைச் சாவடிகளையும் எஸ்பி பார்வையிட்டார்.
Similar News
News August 23, 2025
29 பேருக்கு பணி ஆணை வழங்கிய ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று(அக.22) சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்று தேர்வான 29 நபர்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வழங்கினார். இதில் வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
News August 23, 2025
வாணியம்பாடியில் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியூடவுன் பகுதியில் நாளை (23-08-2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் பயனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. அனைத்து தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது .
News August 22, 2025
திருப்பத்தூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க