News January 7, 2025
பிச்சைக்காரர்களை பிடித்துக் கொடுத்தால் ரூ.1000 பரிசு

ம.பி.யில் இந்தூர் நகரத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற, நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பிச்சைக்காரர்களை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஆட்சியருக்கு போன் கால்கள் வந்தவண்ணம் உள்ளதாம். பிச்சைக்காரர்களுக்கு பிச்சையிடுவது குற்றம் என ஏற்கெனவே இங்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 17, 2026
தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹4,000 மாற்றம்

தங்கம் சவரனுக்கு ₹400 அதிகரித்த நிலையில், வெள்ளி விலையும் இன்று(ஜன.17) கிலோவுக்கு ₹4,000 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹310-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹3,10,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ்(28) 2 டாலர்கள் குறைந்துள்ள போதிலும், இந்திய சந்தையில் வெள்ளி விலை உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 17, 2026
விஜய்க்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? காங்., ரகசிய சர்வே!

விஜய்க்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என காங்., ரகசிய சர்வே எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், 100-ல் 61 பேர் தவெகவிற்கும், 23 பேர் திமுக கூட்டணிக்கும், 15 பேர் அதிமுக கூட்டணிக்கும் வாக்களித்திருக்கிறார்களாம். மேலும், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்த பின் மீண்டும் சர்வே எடுத்தபோது, 71% வாக்குகள் தவெகவுக்கு வந்திருக்கிறதாம். காங்., கூட்டணி நிலைப்பாட்டில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா?
News January 17, 2026
நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்: EPS

MGR பிறந்தநாளான இன்று அதிமுக நிர்வாகிகள் அனைவரும் சபதம் எடுக்க EPS வலியுறுத்தியுள்ளார். ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்ற MGR பாடலை மேற்கோள் காட்டி, அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, வரும் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு தொண்டரும் கடுமையாக உழைக்க சபதம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.


