News January 6, 2025
ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த விஜய்

சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும் என விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் பேரவை கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநர் – அரசுக்கு இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கை கைவிட்டு, மக்கள் பிரச்னைகள் குறித்தான விவாதங்களே பேரவையில் இடம் பெற வேண்டும். அதனை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
திருச்சியை திக்குமுக்காடச் செய்த விஜய் PHOTOS

தேர்தல் பரப்புரையை தொடங்கிய முதல் நாளே திருச்சியை திணறடித்துள்ளார் தவெக தலைவர் விஜய். விமான நிலையத்தில் இருந்து விஜய் வர தாமதமான நிலையில், அவர் முதன்முதலில் பரப்புரையை தொடங்குவதாக இருந்த மரக்கடை பகுதியில் பெருங்கூட்டம் திரண்டது. தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்துவந்த விஜய், ஆரவாரத்திற்கு இடையே உற்சாகமாக உரையாற்றிய போட்டோஸ் வைரலாகி வருகின்றன. மேலே ஸ்வைப் செய்து அதனை பாருங்கள்.
News September 13, 2025
செங்கோட்டையனுடன் இணைந்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தனது ஆதாரவாளர்களுடன் செங்கோட்டையனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். அதிமுகவில் ஒற்றுமை இல்லாததால், கூட்டணிக்கு தேடி வருபவர்கள் கூட, தற்போது வரவில்லை என்றார். செங்கோட்டையன் விடுத்த 10 நாள்கள் கெடு முடிந்தபின் நல்ல செய்தி வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
News September 13, 2025
இசைஞானிக்கு பாராட்டு விழா தொடங்கியது

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சிம்பொனி நாயகன் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், DCM உதயநிதி, கமல், ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் ஸ்டாலின் இளையராஜாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்க உள்ளார். 50 ஆண்டுகளாக இசைத்துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கிய இசைஞானியை தமிழர்கள் கொண்டாடும் நிகழ்ச்சியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.