News March 25, 2024
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கிய இந்தப் பொதுத்தேர்வை, சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். கடைசி தேர்வான இன்று, கணிதம், விலங்கியல், வணிகவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. மேலும், பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 5, 2025
கோர ரயில் விபத்து..11 அப்பாவி பயணிகள் பலி!

சத்தீஸ்கர் மாநிலம் ஜெயராம் நகர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. நேற்று (நவ.11) மாலை 4 மணிக்கு நடந்த இவ்விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. 25-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கு, ரெட் சிக்னல் விழுந்தும் பயணிகள் ரயிலை நிறுத்தாததே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News November 5, 2025
மனிதர்கள் தடயமே இல்லாமல் போவார்கள்: நாசா எச்சரிக்கை

பூமியில் உள்ள ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து வருவதால், மனிதர்களே வாழ முடியாத நிலை உருவாகலாம் என நாசா எச்சரித்துள்ளது. நாம் சுவாசிக்கும் பாதிக்கும் மேலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் கடல்களில் உள்ள நுண்ணுயிர்கள் வெப்பமயமாதல் & அமிலமயமாக்கல் காரணமாக குறைந்து வருகின்றனராம். மேலும், காடுகளை அழிப்பது, மாசு அதிகரிப்பு, கார்பன் டைஆக்சைடு வெளியேற்றம் போன்றவற்றால் பூமியில் ஆக்சிஜன் அளவு குறைந்து வருகிறதாம்.
News November 5, 2025
BREAKING: விஜய் கண்ணீருடன் அஞ்சலி

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக பொதுக்குழுக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. பொதுக்குழு தொடங்கிய உடன் கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை செய்தார். இதன்பின், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு விஜய் உள்ளிட்ட அனைத்து தவெக நிர்வாகிகளும் கண்ணீருடன் மெளன அஞ்சலி செலுத்தினர்.


