News January 6, 2025
மீண்டும் லாக்-டவுன் வருமா?

HMPV தொற்று இந்தியாவிலும் உறுதிப்படுத்தப் பட்டதாகத் தொடர்ந்து மீண்டும் லாக்-டவுன் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2020ஆம் ஆண்டு லாக்-டவுன் மூலம் ஏற்பட்ட பாதிப்பு உலகம் முழுவதும் கடுமையாக இருந்தது. இதனையடுத்து, 2021ஆம் ஆண்டு கோவிட் இரண்டாவது அலையின்போது முழு லாக்-டவுன் இல்லாமல் பெருந்தொற்று எதிர்கொள்ளப்பட்டது. ஆகையால், HMPV பரவினால் அதன் தீவிரத்தை பொறுத்தே லாக்-டவுன் தொடர்பான முடிவு எடுக்கப்படும்.
Similar News
News September 13, 2025
19 பள்ளி மாணவர்கள் மரணம்

மியான்மரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 19 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் ராணுவத்திற்கும், ஆயுதக் குழுவான அரக்கன் ஆர்மி (AA)-க்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. மேற்கு ராக்கைன் மாகாணத்தில் தனியார் பள்ளி மீது ஆயுதக் குழு நடத்திய வான்வழி தாக்குதலில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இது மிருகத்தனமான தாக்குதல் என்று ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
News September 13, 2025
Alert: இன்னும் 2 நாள் தாண்டினால் ₹5000 அபராதம்

ஐடிஆர் (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. ஏற்கெனவே ஜூலை 31-லிருந்து செப்.15 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டதால், இதற்கு மேல் அவகாசம் வழங்க வாய்ப்பில்லை. எனவே, , கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்க, அனைவரும் விரைவில் ITR தாக்கல் செய்யுமாறு Income Tax India வலியுறுத்தியுள்ளது. செப்.15-க்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால் ₹5000 வரை அபராதம் விதிக்கப்படும்.
News September 13, 2025
CPI மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முத்தரசனின் பதவி காலம் நிறைவடைந்ததால், புதிய மாநிலச் செயலாளரை தேர்வு செய்வதற்கான மாநிலக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், மாநில துணைச் செயலாளராக இருந்த மு.வீரபாண்டியனை, மாநிலச் செயலாளராக நியமித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக முத்தரசன் இப்பதவியை வகித்தது குறிப்பிடத்தக்கது.