News January 6, 2025
கணவருக்கு மனைவி தீ வைப்பு; 5 நாட்கள் பின் கணவர் உயிரிழப்பு

கூடலுார் பகுதியை சேர்ந்தவர் பொன்விஜய். இவரது மனைவி இலக்கியா. குடும்ப தகராறு காரணமாக கடந்த டிச.31 அன்று தூங்கி கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோல் ஊற்றி மனைவி தீ வைத்தார். இதில் கணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் கூடலூர் வடக்கு போலீசார் இலக்கியாவை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று (ஜன.5) சிகிச்சை பலனின்றி பொன்விஜய் உயிரிழந்தார்.
Similar News
News November 12, 2025
போடி: வீடு புகுந்து நகைகளை திருடிய சிறுவர்கள்

போடி அருகேயுள்ள துரைராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (27) என்பவரது வீட்டுக்குள் புகுந்த பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த 15, 13 வயது உடைய 2 சிறுவர்கள் பீரோவை திறந்து ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர். இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 12, 2025
தேனி: அண்ணா பல்கலை.,யில் வேலை., உடனே APPLY

தேனி மக்களே, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Accounts Executive / Data Entry Operator பல்வேறு பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ. 14க்குள் <
News November 12, 2025
தேனி: வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

பெரியகுளம், டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (60). இவா் தேனி அருகே மதுராபுரி பகுதியில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்றாா். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் காணப்படாத வாகனம் பாலமுருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. படுகாயமடைந்த பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (நவ.11) உயிரிழந்தாா். இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு.


