News January 5, 2025

நாளை முதல் ஜல்லிக்கட்டுக்கு முன்பதிவு

image

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. <>Madurai.nic.in<<>> இணையதளம் மூலம் நாளை மறுதினம் மாலை 5 மணிக்குள் பதிவு செய்யவும், பதிவு செய்யப்படும் காளைகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என ஏதேனும் ஓர் இடத்தில் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Similar News

News September 13, 2025

சற்றுமுன்: முன்னாள் முதல்வர் காலமானார்

image

மேகாலாயா Ex CM டோன்வா டெத்வெல்சன் லாபங்(91) உடல் நலக்குறைவால் ஷில்லாங்கில் உள்ள பெத்தானி ஹாஸ்பிடலில் காலமானார். ஏழை குடும்பத்தில் பிறந்து சாலை தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய இவர், 1992 – 2008 வரை 4 முறை மேகாலயாவின் முதல்வராக இருந்துள்ளார். 1972-ல் சுயேச்சையாக நோங்போ தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று MLA ஆன பிறகு பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். #RIP

News September 13, 2025

வேன்களை மினி பஸ்களாக இயக்க தமிழக அரசு அனுமதி

image

குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை கிடைக்கும் நோக்கில், 12-16 இருக்கைகள் கொண்ட வேன்களை (Maxi Cab) மினி பஸ்களாக இயக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்த வேன்களில் நின்று செல்ல பயணிகளுக்கு அனுமதியில்லை. அதேநேரம், நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பஸ்கள் 200 செ.மீ., உயரம் இருக்கலாம். அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும் பஸ்கள் 150 – 200 செ.மீ., உயரம் இருக்கலாம்.

News September 13, 2025

சளி தொல்லைக்கு இந்த டீ ஒன்றே போதும்!

image

மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பவரா நீங்கள் ? உங்களுக்காக அருமருந்து இதோ! வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி, சித்தரத்தை, ஆடாதோடை இலை இவற்றை சம அளவு எடுத்து வறுத்து, இடித்து பொடியாக்கி அதை கொதிக்கும் நீரில் போட்டு இறக்கிவிட்டு தேன் கலந்து குடியுங்கள் போதும். சளி தன்னால் நீங்கிவிடும். அத்துடன் உடலுக்கு புத்துணர்வும் வரும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!