News January 5, 2025

400 ஆண்டுகளாக ஞாயிறு அன்று கறி சாப்பிடாத கிராமம்

image

பல வீடுகளில் ஞாயிறில் கறி சமைப்பது வழக்கம். ஆனால் பல நூறு ஆண்டாக ஆந்திராவின் நந்தியாலா மாவட்டம் எஸ்.கோட்டூர் கிராமத்தில் ஞாயிறு அன்று கறி சமைப்பது, மது அருந்துவது இல்லை. ஏன் யாராவது இறந்தாலும், இறுதிச் சடங்கு அடுத்த நாள் தான். 400 ஆண்டுகளுக்கு முன்பு வயல்வெளியில் கிடைத்த சுப்பிரமணியேஸ்வரர் சிலைக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. அவருக்கு ஞாயிறு பிடித்தமான நாள் என கிராம மக்கள் நம்புவதால் இந்த நம்பிக்கை.

Similar News

News September 13, 2025

அடுத்தக்கட்ட நடவடிக்கை? செங்கோட்டையன் பதில்

image

தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லி சென்று திரும்பிய நிலையில், அவரது அடுத்தக்கட்ட நகர்வை எல்லோரும் உற்று நோக்குகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைத்து நல்லதே செய்வோம் என்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

News September 13, 2025

பொன்னில் வடித்த சிலையே ஜான்வி

image

பாலிவுட், டோலிவுட்டில் கலக்கி வரும் ஜான்வி கபூர், கோலிவுட்டில் எப்போது நடிப்பார் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். அவரின் தாயைப் போலவே வசீகரிக்கும் அழகுடைய ஜான்வி கபூர், இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர். அவருடைய அடுத்த படங்களின் விவரத்தை பார்க்கையில் இன்னும் சில ஆண்டுகளுக்கு தமிழ் ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என தெரிகிறது.

News September 13, 2025

யார் இந்த சுஷிலா கார்கி?

image

நேபாளின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள சுஷிலா கார்கி அந்நாட்டின் முதல் பெண் PM ஆவார். * இவர் 2016-ல் நேபாள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக செயல்பட்டவர். * பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவர். * 1990-ல் சிறை தண்டனை அனுபவித்தவர். * நேபாளில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு குடியுரிமை தருவது தொடர்பான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியவர்.

error: Content is protected !!