News January 5, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஜனவரி 4 ) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள, தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் : 9884098100

Similar News

News August 5, 2025

இராணிப்பேட்டை: கஷ்டங்களை தீர்க்கும் அதிசய தளம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூர் என்னும் இடத்தில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர் ஆலயம் உள்ளது. பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக, அதாவது `அப்பு ஸ்தலமாக’ இந்த கோயில் இருப்பது மற்றுமொரு விசேஷமாகும். இந்த கோயில் பித்ரு தோஷம் நீக்குகின்ற, பெருநோய் சாபங்கள் நிவர்த்தி செய்கின்ற சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

ராணிப்பேட்டை காவல்துறை இன்று (ஆகஸ்ட் 5) சமூக வலைத்தளத்தின் விழிப்புணர்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்வது ஆபத்தானது எனவும், “பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அடுத்த பேருந்திற்காக காத்திருங்கள்” என்ற வாசகத்துடன் செய்தி இடம்பெற்று இருந்தது. மக்களே யாரும் பேருந்து படியில் நின்று பயணம் செய்யாதீர்கள்! விழிப்போடு இருங்க!

News August 5, 2025

ராணிப்பேட்டையில் ரயில்வே வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே, இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மேல்தான் <>இந்த இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்க முடியும். சேவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!