News January 4, 2025
கோவிலில் பூஜை பொருட்களை திருடியவர் கைது

புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட முத்தியால்பேட்டை கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயிலின் பூட்டை உடைத்து கோயிலின் உள்ளே இருந்த பித்தளை பூஜை பொருட்களை திருடிய லாஸ்பேட்டையைச் சேர்ந்த கராஜ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 11, 2025
புதுவை: பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செப்.11) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW !
News September 11, 2025
புதுச்சேரியில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு

பாரதியார் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில், இன்று (11.09.2025) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன் திருமுருகன் சட்டமன்ற உறுப்பினர்கள் AK சாய், J. சரவணன்குமார், S. ரமேஷ் R.பாஸ்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
News September 11, 2025
வி.ஏ.ஓ போட்டி தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்!

புதுச்சேரி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 41 கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான போட்டி தேர்வு, வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகே, மற்றும் ஏனாம் பகுதிகளில் மொத்தம் 86 தேர்வு மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டினை, தேர்வர்கள் htttp://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் இன்று 11ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.