News January 4, 2025
₹4 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ₹4 லட்சம் நிதியுதவி அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இயங்கிவந்த சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, தலைமறைவான அதன் உரிமையாளரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News September 12, 2025
IT RETURNS காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

வருமான வரி கணக்கு (IT Returns) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. கெடு தேதியான செப்.15-க்கு இன்னும் 3 நாள்களே இருக்கும் நிலையில் இதுவரை 5.47 கோடி பேர் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர். மேலும், Form 26AS, TDS, tax credit verification போன்றவற்றுக்கான TRACES தளமும் சரியாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. நீங்கள் IT Returns தாக்கல் செய்துவிட்டீர்களா?
News September 12, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறியும் போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
News September 12, 2025
முகூர்த்த நாள், விடுமுறை.. 3 நாள் ஸ்பெஷல் அறிவிப்பு

வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு பொதுமக்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, இன்று முதல் 980 ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று, நாளை, ஞாயிறு நாள்களில் சென்னையில் இருந்தும், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் புக் பண்ணலாம். SHARE IT.