News January 4, 2025
ED சோதனை: துரைமுருகன் வீட்டில் 2 கதவுகள் உடைப்பு

வேலூர் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. மூடியிருந்த 2 அறைகளை திறக்க சாவி இல்லாததால், கதவுகளை உடைத்து சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக, அவரது வீட்டிற்குக் காலையில் அதிகாரிகள் சென்றபோது, அங்கு யாரும் இல்லாததால் வெளியில் காத்திருந்தனர். பின்னர், வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்திடம் பேச, உறவினர்கள் முன்னிலையில் சோதனை நடக்கிறது.
Similar News
News September 15, 2025
ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா இருக்கான்னு தெரியணுமா?

வெளியூர்களுக்கு செல்லும் போது ஹோட்டல்களில் தங்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அப்படி தங்கியிருக்கும் அறையில் ஏதாவது கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்குமா என்ற ஒருவித பயத்துடனே தங்க வேண்டியுள்ளது. எனவே அடுத்த முறை ஹோட்டல் அறையில் தங்க நேரும் போது அந்த அறை பாதுகாப்பானதா என்பதை சில டிரிக்குகள் மூலம் அறிந்துகொள்ளலாம். டிரிக்குகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே Swipe செய்து பாருங்கள்.
News September 15, 2025
விஜய்யின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: வைகோ

விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திரையில் முன்னணி நட்சத்திரமாக இருப்பதாக, அவரை காண மக்கள் கூடுவதாகவும், ஆனால் தேர்தல் களத்தில் அது எடுபடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்களது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை தடுக்கும் சக்தியை விஜய்யால் ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
ITR தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு? IT விளக்கம்

ITR தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை வருமான வரித்துறை மறுத்துள்ளது. இது முற்றிலும் வதந்தி எனவும், ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதையும் வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது. முன்னதாக, வரும் 30-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியானது. நாடு முழுவதும் இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் ITR தாக்கல் செய்துள்ளனர்.