News January 3, 2025
2024 -இல் லஞ்ச ஒழிப்பு பிரிவில் 14 வழக்குகள்

லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் 2024ல் மக்களிடம் அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன் பின் விஏஓ, பிடிஓ, ஊராட்சி தலைவர் என மொத்தம் 12 பேர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது. மேலும் 4 சொத்து குவிப்பு வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News October 27, 2025
விருதுநகரில் நாளை மின் தடை

விருதுநகர் மக்களே, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, மல்லிபுதூர், ஆலங்குலம், சுப்பையாபுரம், கங்கரக்கோட்டை, செவல்பட்டி, வெம்பக்கோட்டை, பெரியவள்ளிக்குளம், GN பட்டி, துலுக்கப்பட்டி, அருப்புக்கோட்டை, பெரியபுளியம்பட்டி, பாளையம்பட்டி, வேலாயுதபுரம், பந்தல்குடி ஆகிய மின் நிலையங்களில் நாளை (அக். 28) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மேலும் அறிய <
News October 27, 2025
விருதுநகர்: கண்மாயில் இளைஞர் சடலம் மீட்பு

விருதுநகர், ஆத்திப்பட்டியை சேர்ந்த அரவிந்த்சாமி (23) இறைச்சி வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் அக். 24 மாலையில் இருந்து வீட்டிற்கு வரவில்லை என அவருடைய தந்தை அழகுபாண்டி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இந்நிலையில் நேற்று ஆத்திபட்டியில் உள்ள கண்மாயில் அரவிந்த்சாமி சடலமாக மிதந்து கிடந்தார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News October 26, 2025
விருதுநகர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

விருதுநகர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


