News January 3, 2025

ஆருத்ர தரிசனம் கடலூரில் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் : சிதம்பரம் வட்டம், சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆருத்ர தரிசனம் முன்னிட்டு ஜன.13ஆம் தேதி அன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்.01ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

Similar News

News August 16, 2025

கடலூரில் நிலம் வாங்குவோர் கவனத்திற்கு

image

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். நிலத்தின் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி அறிய <>clip.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News August 16, 2025

இல.கணேசன் மறைவுக்கு வேல்முருகன் இரங்கல்

image

பண்ருட்டி எம்எல்ஏ-வும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில். “இனிய நண்பரும், பழகுவதற்கு எளியவருமான இல.கணேசனின் மறைவு, அவர் சார்ந்த இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

News August 16, 2025

கடலூர்: மனை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

கடலூர் மக்களே, அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், அவற்றை வரன்முறை செய்து கொள்ள அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் <>onlineppa.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் கூடுதல் தகவல்களுக்கு உங்கள் அருகிலுள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தை நேரடியாக தொடர்புகொண்டு விவரங்களை பெறலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!