News March 25, 2024
அண்ணாமலையின் வலது கையை தூக்கினார் இபிஎஸ்

பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர், கோவை பெருங்கொட்ட பொறுப்பாளர் (கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர்) செல்வபிரபு, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்து கொண்டார். அண்ணாமலைக்கு வலது கையாக செயல்பட்டு, அவருக்கு ஆதரவாக 12 மணி நேரத்திற்கு முன்பு வரை தீவிரமாக வாக்கு சேகரித்தவரை, இபிஎஸ்ஸின் வலது கையான எஸ்.பி.வேலுமணி ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளார்.
Similar News
News November 5, 2025
தனியே களமிறங்கும் திட்டத்தில் அண்ணாமலை?

தனிக்கட்சி தொடங்கினால் சொல்கிறேன் என அண்ணாமலை சொன்னதில் இருந்து தமிழக பாஜகவில் ஒருவித பரபரப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த பரபரப்பு இன்னும் அடங்கிய பாடில்லை என்கின்றனர். அதாவது, தற்போதைய பாஜக மாநில தலைவர் தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கையைத் தீவிரமாக்கி வருவதாக அண்ணாமலை ஆதங்கப்பட்டாராம். தனியே களமிறங்கும் திட்டத்துக்கு துணையாக, பிற கட்சி நிர்வாகிகள் சிலரிடமும் பேசுவதாக கூறப்படுகிறது.
News November 5, 2025
ஏன் ஒரு மெடல் கூட கொடுக்கல?

இந்திய வீராங்கனை பிரதிகா ராவலுக்கு நடப்பது அநீதி என நெட்டிசன்கள் குரலெழுப்பி வருகின்றனர். WC தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் காயமடைந்த அவருக்கு, ஏன் எந்தவொரு மெடலும் வழங்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. 308 ரன்கள் அடித்து, தொடரில் அதிக ரன்கள் எடுத்த 2-வது இந்திய வீராங்கனையாக இருந்தும், அவரை புறக்கணித்தது சரியா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News November 5, 2025
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை: தங்கமணி

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை என போதை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாக தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார். செல்லுமிடங்களில் திமுக ஆட்சி எப்போது முடியும்; அதிமுக ஆட்சி எப்போது வரும் என மக்கள் கேட்கின்றனர் எனக் கூறிய அவர், அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்பதால் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என விமர்சித்தார். மேலும், 2 இன்ஜின் இருந்தால்தான் தமிழகம் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.


