News January 3, 2025

மதுரையில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

image

மதுரை மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

Similar News

News December 24, 2025

போதையில் வீட்டுப் படியில் தடுமாறி விழுந்த எலக்ட்ரீசியன் பலி

image

திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி மகன் பாண்டியராஜ்(32). எலக்ட்ரீசியனான இவர் மது போதைக்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் முழு போதையில் வீட்டிற்கு வந்தவர் வீட்டுப் படி ஏறிய போது தடுமாறி கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 24, 2025

மதுரை: கணவர் கண்முன்னே மனைவி பலியான சோகம்

image

கள்­ளிக்­குடி செங்­கப்­படையை சேர்ந்­த­வர் மூர்த்தி(56). இவர் தன் மனைவி சரஸ்­வ­தியு­டன் பைக்கில் நேற்று சென்று கொண்­டிருந்­தார். ரெங்­கப்பநாயக்­கர் ஊரணி அருகே சென்ற போது பைக்கில் இருந்து மனைவி கீழே விழுந்­தார். தலை­யில் பலமாக அடி­பட்­ட நிலையில் அரசு மருத்துவம­னைக்கு சிகிச்­சைக்­காக கொண்டு செல்லும் வழியி­லேயே சரஸ்­வதி உயிரிழந்­தார். விபத்து குறித்து திருமங்­க­லம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 24, 2025

மதுரையில் லிப்ட் கேட்டு டூவீலரை பறித்து சென்ற சம்பவம்

image

மதுரை, திருமங்கலம் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம்(49) கட்டட தொழிலாளி கப்பலூரில் வேலை செய்து வருகிறார். மதியம் டீ குடிக்க ரிங் ரோட்டில் உள்ள புளியங்குளத்திற்கு டூவீலரில் சென்றார். அப்போது 28 வயது நபர் லிப்ட் கேட்டு பயணித்தார். சிறிது தூரம் சென்ற பிறகு ஆறுமுகத்தை அவர் கீழே தள்ளி விட்டு டூவீலரை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!