News January 2, 2025
கல்வியே ஆயுதம்! 1-8ம் வகுப்பு வரை ‘0’ இடைநிற்றல்

மாநிலத்தில் பள்ளிப் படிப்பை இடையில் நிற்கும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் ‘0’ என மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆம்! பள்ளிப் படிப்பை தொடங்கிய 100 சிறுவர்களில் 100 பேரும் நடுநிலைப்பள்ளியை முடிக்கின்றனர். ஆனால், 9-10 வகுப்புகளில் இடைநிற்றல் 7.68%ஆக உள்ளது.
Similar News
News September 14, 2025
‘நாங்க சாகப் போறோம்.. SORRY’

‘நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம். மன்னித்துவிடுங்கள். உங்களை தொந்தரவு செய்ய நாங்கள் விரும்பவில்லை. சாவுக்கு யாரும் காரணமில்லை’. கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சாக்ஷி சாவ்லா(37), மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கணவனுக்கு கடைசியாக எழுதிய வரிகள் இவை. மகனின் நிலையால் ஏற்பட்ட மன அழுத்தமே 2 பேரின் சாவுக்கும் காரணமாக அமைந்துள்ளது. So Sad.
News September 14, 2025
நாளையே கடைசி: உதவித்தொகையுடன் வேலை

திருச்சி BHEL நிறுவனத்தில் உள்ள 760 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பதவிக்கேற்ப ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு. வயது வரம்பு: 18 – 27. டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹11,000, டிகிரி முடித்தவர்களுக்கு ₹12,000 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் ஆகும். மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 14, 2025
BREAKING: அசாமில் நிலநடுக்கம்

அசாமில் சற்றுநேரத்திற்கு முன்பு (இன்று மாலை 4.41 மணிக்கு) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சோனிட்புர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பாதிப்பு குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. கூடுதல் விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.