News January 2, 2025
பள்ளி வேன் சக்கரம் முறிந்து விபத்து

திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் வேன் சக்கரம் முறிந்து இன்று விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் உயிர்த்தப்பினர். வேன் சக்கரம் முறிந்ததில் சுமார் 25 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவத்தின் போது மற்ற வாகனங்கள் வராததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News December 26, 2025
திண்டுக்கல்: டிகிரி இருந்தால் மாதம் ரூ.13,000!

திண்டுக்கல் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (BOI) தேசிய அளவிலான தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 400 இடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.13,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News December 26, 2025
திண்டுக்கல்: G Pay, PhonePe இருக்கா?

திண்டுக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 26, 2025
திண்டுக்கல்: போதையில் நடத்த விபரீதம்!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்த பிரபு (35) குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி ஈஸ்வரி (32)யை சம்மட்டியால் தாக்கி கொலை செய்தார். காதல் திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக பிரபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


