News March 25, 2024
நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலி, 1,000 வீடுகள் தரைமட்டம்

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 5 பேர் பலியாகினர். அந்நாட்டின் வடக்கு பகுதியில் நேற்று 6.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1,000 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியான நிலையில், ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிகை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News October 26, 2025
திமுகவின் கவுன்ட் டவுன் ஸ்டாட் ஆகிவிட்டது: நயினார்

உங்களுடன் ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று மட்டும் சொல்லும் திமுக, மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அரியலூரில் பரப்புரை செய்த அவர், ஸ்டாலின் ஆட்சியின் கவுன்ட் டவுன் ஸ்டாட் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 26, 2025
ஹாஸ்பிடல் அலட்சியத்தால் 5 குழந்தைகளுக்கு HIV தொற்று

ஜார்கண்டில் அரசு ஹாஸ்பிடலின் அலட்சியத்தால் 5 குழந்தைகளுக்கு HIV நோய் தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலசீமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரத்தம் ஏற்றும்போது இந்த தவறு நடந்துள்ளதை, விசாரணையில் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், ரத்த வங்கியில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததது கண்டறியப்பட்டுள்ளது.
News October 26, 2025
மாரியின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்

‘பைசன்’ படக்குழுவை நேரில் அழைத்து தனது பாராட்டுகளை CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாரிசெல்வராஜ் தனது படங்களில் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை என்றும், இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருப்பதாகவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


